திருமணத்தில் பெண்கள் என்ன துஆ ஓத வேண்டும்?

கேள்வி :

திருமணத்தில் பெண்கள் என்ன துஆ ஓத வேண்டும்?

பதில் :

திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு

حدثنا قتيبة حدثنا عبد العزيز بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم كان إذا رفأ الإنسان إذا تزوج قال بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير قال وفي الباب عن عقيل بن أبي طالب قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن صحيح

பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி

(பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!)

என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1011

حدثنا سليمان بن حرب حدثنا حماد هو ابن زيد عن ثابت عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال بارك الله لك أولم ولو بشاة

அல்லது பாரகல்லாஹு லக்க என்று மட்டும் கூறலாம்.

அறிவிப்பவர் :அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5155