97:7371 ஓரிறைக் கோட்பாடு

பாடம் : 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்.104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்தவொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்… (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன் என்று கூறாதீர்கள். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை (யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது;ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகிறான் (28:56). இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது என முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185) 
7371. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தார்கள்.2 
Book : 97