80:6304 பிரார்த்தனைகள்

பாடம் : 34 (இறைவா) என்னால் எவரேனும் மன வேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது. 
6304. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.2 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Book : 80