52:2641 சாட்சியங்கள்


பாடம் : 5 நேர்மையான சாட்சிகள் அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள் ளுங்கள். (65:2) இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். (2:282) 

2641. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைத் கொண்டே. எனவே, தம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகிறவரை நம்பிக்கைக்குரியவராக்கி கெரளவித்துக் கொள்வோம். அவரின் இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரின் அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; தம் அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே. 
Book : 52