17:1070 குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

பாடம் : 4 அந்நநஜ்ம் (எனும் 53ஆவது) அத்தியா யத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 
1070. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். அக்கூட்டத்தில் ஒருவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகக் கொல்லப்பட்டதை பார்த்தேன். 
Book : 17