78:5972 நற்பண்புகள்

பாடம் : 3 பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரியவேண்டும். 
5972. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் 
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.3 
Book : 78