45:2430 கண்டெடுக்கப்பட்ட பொருள்.

பாடம் : 5 ஒருவருக்கு கடலில் மரக்கட்டையோ ஒரு சாட்டையோ அல்லது அது போன்ற ஏதேனும் ஒரு பொருளோ கிடைத்தால்…. 
2430. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். ‘அந்த மனிதர் கடலில் தன்னுடைய செல்வத்துடன் வாகனம் ஏதும் வருகிறதா என்று கவனிப்பதற்காகப் புறப்பட்டார். அப்போது ஒரு மரத்துண்டை (கரையில் ஒதுங்கக்) கண்டார். அதைத் தன் குடும்பத்தினருக்கு விறகாகப் பயன்படட்டும் என்று எடுத்தார். அதை அவர் பிளந்தபோது தன் செல்வத்தையும் (அதை வைத்து அனுப்பியவரின்) கடிதத்தையும் (அதனுள்) கண்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) ஹதீஸ் முழுவதையும் கூறினார்கள். 
Book : 45